விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா குமார் நடித்து வருகிறார்.அந்தவகையில் தனது சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் நடிகை பிரியங்கா குமார். தனது 15-வது வயதிலேயே மாடலிங் துறையில் அறிமுகமாகி ஏகப்பட்ட விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றவர். மாடலிங் துறையில் கலக்கிய ப்ரியங்காவுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. தனது அழகினால் இளைஞர்களை ஈர்க்க தொடங்கினார் ப்ரியங்கா.
ஆனால் சில காரணங்களால் சாக்லேட் சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சீரியலில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்கும் ப்ரியங்கா நிஜத்தில் அப்படியே உல்ட்டாவாக காட்சியளிக்கிறார். சீரியலில் சேலையில் ஜொலிக்கும் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.
இவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் என்ற சீரியலில் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். சீரியலில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா குமார், நிஜத்தில் அப்படியே உல்ட்டாவாக காட்சியளிக்கிறார்.சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருந்து வரும் பிரியங்கா குமார் கடற்கரையில் வைத்து எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இவரின் இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.