தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் 1992ம் ஆண்டு சைலஜா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு அக்ஷிதா, துருவ் விக்ரம் என ஒரு மகள் ஒரு மகன் இருகிறார்கள். இதில் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். முதல் படத்திலே ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடிய துருவ் நல்ல பரீட்சியமான நடிகராக பார்க்கப்பட்டார். தொடர்ந்து அதன் பிறகு தனது தந்தை விக்ரம் உடன் மகான் படத்தில் நடித்திருந்தார். துருவ் விக்ரமுக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் ஏதும் கிடைக்கவில்லை.2019 -ம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோவாக அறிமுகமானவர் தான் துருவ் விக்ரம்.
இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும், படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக கவர்ந்தது. இதைதொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் ஆதித்ய வர்ம படத்தில் ஹீரோயினாக நடித்த பனித்தா சந்துவுடன் துருவ் விக்ரம் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இருவரும் மது அறிந்துவிட்டு உல்லாசமாக சுற்றித்திரிவதாக பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஓட்டல் அறையில் இருந்தபடி துருவ் எடுத்துள்ள அந்த வீடியோவில், நடிகை பனிடா சந்து இடம்பெற்றுள்ளது இருந்தது ககுறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் தன்னுடன் நடித்த ஹீரோயின் பனித்தா சந்துவுடன் நெருக்கமாக பழகி வருவதோடு அவருடன் டேட்டிங் செய்து வருகிறாராம். அதுமட்டும் அல்லாமல் மது போதையில் நடிகையுடன் உல்லாசமாக இருந்து வருவதாக சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.