ஒரு படம் பண்ணிட்டு ஓவர் ஆட்டிடூட் காட்டும்…! உண்மை முகத்தை உடைத்த பிரபலம்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 சீசன் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்ட பிரபலமானவர் தான் பவித்ரா.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த நடிகை பவித்ரா லட்சுமி தன்னுடைய அம்மா மரணம் அடைந்ததை பற்றி எமோஷனலாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் உடல் நல குறைவால் இருந்த பவித்ரா லட்சுமியின் அம்மா உயிரிழந்து விட்டதாக அவர் உருக்கமாக கூறியிருக்கிறார். இத்தனை காலமும் தனியாக தன்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டம் பற்றி அதில் கூறி இருக்கிறார்.இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் டான்ஸ், மாடல் ,பேஷன் டிசைனர் என கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் பிகாம் படிக்கும்போது பேஷன் டிசைனரிங்க்கும் படித்து இருக்கிறார். அதனால் தான் காலேஜ் முடிந்ததும் ஷார்ட் பிலிம் நடிக்க தொடங்கிவிட்டார்.

இவர் முதலில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே டான்ஸராக தான் அறிமுகமாகியிருக்கிறார். இப்ப வரைக்கும் இவர் மீடியாவில் இருப்பதற்கு காரணம் டான்ஸ்தான். அதனால் தான் இவர் பெரிதும் டான்ஸை நம்பிக் கொண்டிருக்கிறார். இவர் நடிகை என்று சொல்வதைவிட டான்ஸர் என்று சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவார் .அந்த டான்ஸ் மீது இவருக்கு ஆசை இரண்டரை வயதில் இருந்தே வந்துவிட்டதாம். அதற்கு காரணம் இவரது அம்மா தானாம். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சதிஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார். இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் வித்தகன், ‘குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகை பவித்ரா,

சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் மலையாளம் படத்தில் ஒன்றில் அவர் நடித்திருந்தார்’. இவரை ஒரு நிறுவனம் ஆடிஷனுக்கு அழைத்துள்ளது. அப்போது அவர் ஃபிளைட் சார்ஜ் நான் போட்டுகிறேன், எனக்கு பணம் மட்டும் அனுப்பிவிடுங்க என்று கூறியுள்ளார். அவர்களும் பணம் போட்டு உள்ளனர். ஆனால் கடைசியில் பவித்ரா ஆடிஷன் செல்லவில்லையாம். இதனால் தற்போது சினிமா வட்டாரங்களில், ஒரு படம் பண்ணிட்டு இவ்ளோ ஆட்டிடூட்டு காட்டறாங்க என்று விமர்சித்து வருவதாக வித்தகன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *