என் மேல கைவச்சி பாரு…! ஆடியோ லாஞ்சில் கடுப்பான ஷகீலா…! அவங்க பேசியதை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள் …!

நடிகை ஷகிலா பற்றிய அறிமுகம் தேவையில்லை, அந்த அளவுக்கு அவர் தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலம். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், சில யூடியூப் சேனல்களில் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார்.சமீபத்தில் ஷகிலாவை, அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் தாக்கி கீழே தள்ளிவிட்டார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய ஷகீலா,சமீபகாலமாக என்னை பற்றி செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னை யாரோ அடித்துவிட்டார்கள் என்றும் ஷகீலாவால் நடக்க முடியவில்லை தகவல் வெளிவந்தது.நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் சீத்தல், ஷகீலாவையும், சமாதானம் பேசவந்த அவரின் வழக்கறிஞர்

சௌந்தர்யாவையும் தாக்கிய சம்பவம், கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. தாக்குதலுக்குப் பின்னர், ஷகிலாவும், அவரின் வழக்கறிஞர் சௌந்தர்யாவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், வழக்கறிஞர் சௌந்தர்யா இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்த பின்னர் தெரியவந்திருக்கிறது.வழக்கறிஞர் சௌந்தர்யா புகாரின்படி, நேற்றிரவு சீத்தல் தன்னுடைய வளர்ப்பு தாயான ஷகீலாவை அடித்து கீழே தள்ளிவிட்டு வீட்டிலிருந்து ஓடியிருக்கிறார். இதனையறிந்த சௌந்தர்யாவின்

தோழி நர்மதா, தொலைபேசியில் சௌந்தர்யாவைத் தொடர்புகொண்டு, நடந்ததைக் கூறி உடனடியாக ஷகீலாவுக்கு உதவுமாறு கூறியிருக்கிறார். அதையடுத்து, ஷகீலா வீட்டுக்கு வந்த சௌந்தர்யா, ஷகீலாவிடம் நடந்த அனைத்தையும் கேட்டறிந்த பின்னர் சீத்தலை தொலைபேசியில் அழைத்து, சமாதானம் செய்துவைப்பதாக வீட்டுக்கு அழைத்தார். என் மேல கை வைக்க முடியுமா? இந்த ஷகிலாவை அடிக்க முடியுமா? .. ஏன் அந்த மாதிரி எல்லாம் எழுதுகிறீர்கள் என தெரியவில்லை என்று ஷகிலா கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *