என்ன சொல்ற…! திருமணத்திற்கு முன்பு இதை செஞ்சியா…? கணவர் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன விசித்ரா…!

90களில் கவர்ச்சியாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை விசித்ரா பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் ஐட்டம் டான்சராகவும் காமெடி நடிகர்கள் செந்தில் கவுண்டமணி வடிவேலு போன்றவர்களுக்கு ஜோடியாகவும் நடைபெற்று மத்தியில் பிரபலமானவராக இருந்து கொண்டிருக்கிறார். முத்து திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். இந்த திரைப்படம் தான் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை ரசிகர் மத்தியில் கொடுத்தது என்று கூறலாம். இந்நிலையில், தன்னுடைய கணவர் ஷாஜி குறித்து அவரை சந்தித்து தருணம் குறித்தும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகர் விசித்ரா.அவர் கூறியதாவது நான் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தேன்

அந்த ஹோட்டலில் மேனேஜராக இருந்தவர் தான் என்னுடைய கணவர் ஷாஜி.  அப்போது ஏற்பட்ட எங்களுடைய பழக்கம் காதலாக மாறியது. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் முடியும் வரை நான் ஒரு கவர்ச்சி நடிகை என்பதே என்னுடைய கணவருக்கு தெரியாது.திருமணத்திற்கு பிறகு தான் தெரியவந்தது. ஆனாலும் அதைப்பற்றி பெரிதாக அவர் கவலை கொள்ளவில்லை. சில கட்டுப்பாடுகளை விதித்தார். திருமணம் முடிந்த புதிதில் வெளியே செல்லும் போதெல்லாம் என்னுடைய ரசிகர்கள் சிலர் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர்.காருக்குள் நானும் கணவரும் அமர்ந்திருக்கும் பொழுது ரசிகர் ஒருவர் ஓடி வந்து என்னுடைய கையை பிடித்து குலுக்க ஆரம்பித்தார்.

அதை பார்த்து என்னுடைய கணவர் டென்ஷன் ஆகிவிட்டார். ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்..? இப்படி எல்லாமா இருப்பார்கள்..? என எரிச்சல் அடைந்தார். அது மட்டும் இல்லாமல் இரவு நேரங்களில் என்னுடைய தொலைபேசிக்கு அழைப்புகள் அதிகமாக வரும். இது எல்லாம் நிறுத்த வேண்டும் என்பதற்காக சினிமா சார்ந்த தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்து விட்டேன் என கூறியிருக்கிறார் நடிகை விசித்ரா. அதன்பிறகு என்னுடைய குடும்பம் குழந்தைகள் என ஒரு குடும்பத் தலைவியாக என்னுடைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டேன் எனவும் பதிவு செய்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *