என்னையும் ஆடையில்லாமல் நடிக்க Approach பண்ணாங்க…! ஆனா, உண்மையை கூறிய நடிகை பூர்ணா…!

நடிகர் பரத் நடிப்பில் 2008 -ம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூர்ணா. இப்படத்தை தொடர்ந்து இவர் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 ம் பாகத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து சமீபத்தில் Devil என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். நடிகை பூர்ணா கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் ஆடையில்லாமல் நடிக்க கூப்பிட்டால் என்ன சொல்வீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா 20 நிமிடம் ஆடையில்லாமல் நடித்தது பற்றி என்னால் கூற முடியாது. என்னிடம் ஆடையில்லாமல் நடிக்க சொன்னால் முடியாது என்று கூறுவேன் என பதில் கொடுத்துள்ளார். மேலும், எவ்வளவு பெரிய படம் இருந்தாலும் நான் பண்ண மாட்டேன். எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு வைத்திருக்கிறேன். அதை சொல்றது என்ன காரணம் என்றால், ஒரு ஓடிடி தளத்திற்கான ஒரு வாய்ப்பு எனக்கு வந்தது.

இயக்குனர் ஒரு வீட்டில் லாங் ஷாட்டில் நிர்வாணமாக இருக்கணும் என்று கேட்டார்.ஆனால், தப்பாக நினைத்துக்கொள்ள வேண்டாம் சார், என்னால் முடியாது, கதை நிறுத்திவிடாதீர்கள் வேறொருவரை வைத்து பண்ணுங்கள், அந்த காட்சி படத்திற்கு தேவை என்றாலும் அதை நான் செய்யமாட்டேன். என்னோட முடிவுக்காக அவரின் கதையை கெடுக்க கூடாது, அதனால் நான் அப்படி நடிக்கமாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் பூர்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *