நடிகை காஜல் அகர்வால் தங்கத்தில் ப்ரா அணிந்தபடி தங்க நிற புடவை சகிதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற திரைப்படத்தில்
நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் ஹிந்திலும் சில திரைப்படங்களில் தலைகாட்டி இருக்கிறார். கொரோனா லாக்டவுனின் போது தன்னுடைய நீண்ட நாள் காதலரான கௌதம் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார்.
ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும் கூட தன்னை நான் கவர்ச்சியாகவே உணர்வதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் காஜல் அகர்வால்.இந்நிலையில், தங்கத்தினால் ஆன ப்ரா அணிந்து கொண்டு தங்க நிற புடவையில் தங்க சிலை போல் ஜொலிக்கும் அவருடைய அழகான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.இதனை பார்த்து ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். மேலும் லைக்குகளும் இந்த புகைப்படங்களுக்கு குவிந்து வருகின்றது.