‘இல்ல எனக்கு இது செட் ஆகாது’…! முதலில் ஐஸ்வர்யா காதலுக்கு நோ சொன்ன தனுஷ்…! எதற்கு தெரியுமா…?

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ்.மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது,தற்போது இந்திய சினிமா அளவில் பிரபல நடிகராக விளங்குகின்றார்.ஒரு நடிகராக மட்டுமின்றி பட தயாரிப்பாளராகவும்,பாடலாசிரியர்,இயக்குனர் என பன்முகத் திறமைகளை நடிகர் தனுஷ் கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ்,நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் இந்த தம்பதிக்கு யாத்ரா,லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளது.மேலும் கடந்த 18 வருடங்களாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், இவர்கள் சந்தோஷமாக தங்களுடைய திருமண வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.மேலும் இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில் இவர்கள் திருமணத்திற்கு முன்பு நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இடையே மலர்ந்த காதல் பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.மேலும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், தனுஷின் 2 சகோதரிகளும் நெருங்கிய நண்பர்கள்.அந்த சமயத்தில் தன்னுடைய நண்பர்களை பார்க்க ஐஸ்வர்யா அடிக்கடி வந்து செல்வார்.

அந்த சமயத்தில் ஐஸ்வர்யாவின் பார்வை, தனுஷ் மீது விழுந்துள்ளது.அப்போது இருந்து தான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.ஆனால் நடிகர் தனுஷ் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை எப்படி காதலிப்பது என்ற தயக்கம் அவரிடம் இருந்துள்ளது.மேலும் இவர்களுடைய காதலுக்கு முதலில் பல எதிர்ப்புகள் வந்தது.இருந்தாலும் தனுஷும்,ஐஸ்வர்யாவும் தங்களுடைய காதலில் உறுதியாக இருந்ததால் இரு வீட்டாரும் இதற்கு சம்மதித்து திருமணம் செய்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *