விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 சீசன் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதில் ஹீரோவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மீனா வேமுரி. இவர் பல சீரியல்களில் அம்மா, வில்லி போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.ஈரமான ரோஜாவே முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றத் தொடராக இருந்தது. இந்த தொடரில் பவித்ரா, புதுமுக நடிகர் திரவியம், சியாம், சாய் காயத்ரி, பிரேமலதா, பிரவீன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஒரு தன் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளையும் அதை சமாளித்து எப்படி முன்னேறுகிறாள் என்பதுதான் ஈரமான ரோஜாவேயின் கதை. இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் முடிவுக்கு வந்தது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வித்தியாசமான கதைக்களத்துடன் ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் இரண்டாம் சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி கொண்டே என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடரும் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனா வேமுரி, தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், எனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் அனுபவம் இருக்கிறது.
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பார்கள். இரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருக்கும் போது நான் காரை தவறாக திருப்பிவிட்டேன். பின்னாடி வந்து கொண்டிருந்த கார் திடீரென வேகமாக வந்து ஓவர்டேக் செய்து காரை நிறுத்தினர்.இதனால் நான் மிகவும் பயந்துவிட்டேன். இதையடுத்து நான் சம்பந்தப்பட்ட கார் ஓட்டிய நபரை நடுரோடு என்று கூட பார்க்காமல் பளார் என்று அறைந்தேன். அப்போது அங்கு இருந்தவர்கள் சமாதானப்படுத்தி எங்களை அனுப்பி வைத்தார்கள் என்று மீனா வேமுரி கூறியுள்ளார்.