இப்போது இவருடன் வாழ்ந்து வருகிறேன்…! விவாகரத்து பற்றி பேசிய ரம்யா கிருஷ்ணன்…!

80, 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் நீலாம்பரி, சிவகாமி தேவி போன்ற கதாபாத்திரம் பெரும்பாலும் மக்களின் கவனத்தை ஈர்த்தது.இந்நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், ரம்யா கிருஷ்ணன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.அதில் அவர், “ஒரு பக்கம் அம்மன், அம்மா, ராஜாமாதா என கெளரவமாக நடித்தாலும், சில படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த வயதிலும் கவர்ச்சியாக நடிக்க ரம்யா கிருஷ்ணனால் மட்டுமே முடியும்”.

அதற்கு சிறந்த சான்று பாகுபலி படம். ரஜினி நடிப்பில் அண்மையில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த ஜெயிலர் படம் இறுதியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். 2003-ஆம் ஆண்டு திருமண செய்து கொண்ட ரம்யாகிருஷ்ணன் திருமணத்திற்கு பிறகும் திரைத்துறையில் தொடர்ந்து மும்முரமாக இயங்கி வருகின்றார்.இந்நிலையில், தான் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் அவரது கணவர் கிரிஷ்ணவம்சிக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக அல்லது தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக பல செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

இந்த செய்திகள் குறித்து பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதனுக்கு பேசியுள்ளார். அவர் இது குறித்து பேசும் போது, ஒருமுறை அவரிடம் சென்று ஒரு பத்திரிகையாளர் உங்களுக்கு விவாகரத்து நடந்துவிட்டதா என்று கேட்டதற்கு, லூசு மாதிரி பேசாதீங்க என்று சொல்லிவிட்டு சென்றார் என்று குறிப்பிட்டுள்ளார். “ஒரு சமயம் பத்திரிகையாளர் ஒருவர் ரம்யா கிருஷ்ணன் இடம், உங்கள் கணவருடன் விவாகரத்து ஆகிவிட்டதா?

இப்போது பிரிந்து வாழ்ந்து வருகிறீர்களா என்று கேட்டார்”. “இதற்கு கோபம் அடைந்த ரம்யா கிருஷ்ணன், நான் என் கணவருடன் தான் வாழ்ந்து வருகிறேன். என் கணவர் தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருக்கிறார். நான் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருக்கிறேன்” என்று பதில் அளித்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *