ஆத்தங்கரை மரமேனு பாட்டு பாடின பேச்சியா இவங்க…? இந்த வயதிலும் கட்டுக்குலையாத இளமை மாடர்ன் உடையில் ருத்ரா…!

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் பேச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் ருத்ரா என்கின்ற அஸ்வினி நம்பியார். கேரளாவை சேர்ந்த இவர் நடிகையாகவும் நடன கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார்.கேரளாவில் பிறந்த பிரபல நடிகை ருத்ரா அவர்கள் கடந்த 1991ம் ஆண்டு வெளியான பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து, அதன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும்

ஹிந்தி ஆகிய மொழிகளில் இன்றளவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இறுதியாக தமிழில் வெளியான ஆர்யாவின் ஓரம் போ என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சில குறும் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அதே சமயம் தமிழ் சீரியல்களிலும், மலையாள சீரியல்களிலும் தற்போது வரை பிஸியாக நடித்து வருகிறார் ருத்ரா.

தமிழில் கிழக்குச் சீமையிலே, ராமன் அப்துல்லா, பெரிய தம்பி, கள்ளழகர் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அஸ்வினி நம்பியார் என்கின்ற நடிகை ருத்ரா அடிக்கடி மாடன் உடைகள் அணிந்து இளம் நடிகைகளுக்கு இணையாக போட்டோ சூட்டுகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *