தமிழ் சினிமாவின் பாப்புலர் நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. இவர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.நடிகை ஜோதிகா தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மும்பையை சேர்ந்தவரான நடிகை ஜோதிகா, முதலில் இந்தி படத்தில் தான் நடித்தார். பின்னர் 1999-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஜோதிகா.
முதல்படத்திலேயே திறமையாக நடித்து பாராட்டுக்களை பெற்ற ஜோதிகாவுக்கு அடுத்ததாக சூர்யாவுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது.இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படம் மூலம் தான் சூர்யா – ஜோதிகா இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், பேரழகன், மாயாவி போன்ற படங்களிலும் இருவரும் ஜோடியாக நடித்தனர்.
சுமார் 6 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்த 2006-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டது. இந்நிலையில் சூர்யா தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அழகில் அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஹீரோயின் போல் தியா காட்சியளிக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.