அந்த நேரத்தில் அந்த இடத்தில் எச்சில் தொட்டு வச்சிக்குவேன்…! ரகசியம் உடைத்த நடிகை தமன்னா…!

மார்க்கெட் சரிந்து கிடந்த நடிகை தமன்னா கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து தற்பொழுது மீண்டும் லைம் லைட்டிற்கு வந்திருக்கிறார். லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற திரைப்படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். தமன்னாவா இது என்று வாய் அடைத்துப் போனார்கள் ரசிகர்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னாவிற்கு ஒரே ஒரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகள் மட்டுமே இருந்தாலும் மூன்று கோடி ரூபாய் சம்பளம் பெறும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் அதிரபுரி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தமன்னா முகப்பரு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கூறியிருக்கிறார்.அவர் கூறியதாவது நீங்கள் நினைப்பது போல அந்த கிரீம் இந்த கிரீம் என எதையும் நான் சொல்லப்போவதில்லை. இத்தனை நாட்களாக நான் ரகசியமாக வைத்திருந்த விஷயம் இது. முகப்பருக்களுக்கு நம்முடைய உடலில் தான் தீர்வு இருக்கிறது.முகப்பரு வந்தால் அந்த இடத்தில் எச்சில் தொட்டு வைப்பேன். காலை எழுந்ததும் நம் வாயில் இருக்க கூடிய முதல் எச்சில் தான் சிறந்த மருந்து. இந்த காலை எச்சிலை முகப்பரு உள்ள இடத்தில் வைத்தால் அது இருந்த இடம் தெரியாமல் போய்விடும். நான் இதை தான் செய்வேன்.

முகப்பரு வந்து விட்டால் உடனே பதரமாட்டேன் அந்த இடத்தில் என்னுடைய காலை நேர எச்சிலை தொட்டு வைப்பேன். சில நாட்களில் சரியாகிவிடும். அனைவருக்கும் இதுபோல் சரியாகுமா என எனக்கு தெரியாது. நானா சிறு வயதிலிருந்து நான் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறேன். மேலும், காலை உணவில் கட்டாயம் ஒரு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்வேன். அதிகமாக எனக்கு முகப்பருக்களும் வந்தது கிடையாது என பேசியிருக்கிறார் தமன்னா. அறிவியல் நம்முடைய உமிழ் நீரில் காயங்களை ஆற வைக்கும் வேதிப்பொருள் உள்ளது என கூறுகிறது. அதிலும் காலை நேரத்தில் சுரக்கக்கூடிய உமிழ்நீரில் இது அதிக அளவில் இருக்கிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *