சினிமா வாழ்க்கையில் சந்தித்த வேதனைகள் குறித்து நடிகை சோனா பகிர்ந்துள்ளார். நடிகை சோனா சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சோனா இயக்குநர் சாமி இயக்கத்தில் வெளியான, மிருகம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து தனது திரைவாழ்க்கையை தொடங்கினார். குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதன்பின், சின்னத்திரை பக்கம் வலம் வந்த வண்னம் உள்ளார்.
இந்நிலையில் தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். சினிமா பக்கம் அதில், ”எனக்கு நாலு வருஷம் முன்பே எல்லாம் முடிந்து விட்டது. காதல் பிரேக் அப் ஆனது. அது நன்றாக இல்லை. அவரும் மகிழ்ச்சியாக இல்லை நானும் மகிழ்ச்சியாக அந்த உறவில் இல்லை. சினிமா துறையின் சாபம் அது. கிளாமர் ஆர்டிஸ்ட் காதல் உறவு செட்டாகாது. நான் கொஞ்சம் சைக்கோ. காதல் என்பது இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம்.
சினிமா வாழ்க்கையில் நான் அட்ஜஸ்ட்மெண்ட் கூட செய்திருக்கிறேன். ஒரு பிரபல பத்திரிக்கை இருக்கிறது. அதில் என்னை ஃபோட்டோ ஷூட் செய்திருந்தார்கள். அதில் நான் படுத்து இருக்கும் படியான புகைப்படத்தை பதிவிட்டு, சினிமாவில் படுத்து கூட சம்பாதிக்கலாம் என தலைப்பு கொடுத்து இருந்தது. இதற்குப் பிறகு 6 7 வருடங்கள் வரை நான் போட்டோ சூட் செய்யவில்லை. அது எனக்கு மிகவும் வலித்தது ” என வேதனை தெரிவித்துள்ளார்.