ஃபர்ஸ்ட் நைட் எப்போ..? என கேட்பார்கள்…! அதை கேட்டால் எனக்கு கஷ்டமாக இருக்கும்…! ஆனால்,வித்யா பிரதீப் ஓப்பன் டாக்…!

பிரபல நடிகை வித்யா பிரதீப் தமிழில் சீரியல்களிலும் சினிமாவிலும் நடித்து பிரபலமானவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் நாயகி என்ற சீரியல் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. நாயகி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பேட்டி ஒன்றில் சீரியலில் உங்களுக்கு நடந்த தர்ம சங்கடமான சூழ்நிலை ஏதேனும் இருக்கிறதா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த வித்யா பிரதீப் இருக்கிறது என்று கூறினார். அது என்ன..? என்று கேட்டபோது, நாயகி சீரியலில் எனக்கும் கதாநாயகனுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்ற கேள்வியை எங்கு சென்றாலும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

சீரியல் என்பது அப்படி இப்படி என்று கொஞ்சம் நீளமாகத்தான் செல்லும் எப்போது திருமணம் நடைபெறும் எப்போது அந்த எபிசோடில் அந்த காட்சி ஒளிபரப்பாகும் என்று சீரியல் நடிகர்களுக்கே தெரியாது.ஆனால், எங்கு சென்றாலும் எப்போது உங்களுக்கும் கதாநாயகனுக்கும் திருமணம் நடக்கும் என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அது கூட பரவாயில்லை. திருமணம் முடிந்த பிறகு எங்கள் இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்.

அந்த நேரத்தில் உங்களுக்கு எப்போது சாந்தி முகூர்த்தம் நடக்கும் எப்போது உங்களுக்கும் கதாநாயகனுக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடக்கும் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் எல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால், நான் நடித்த சீரியலை அந்த அளவுக்கு அவர்கள் உருவாகியிருக்கிறார்கள். என்னுடைய நடிப்பை அந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் என பதிவு செய்திருக்கிறார் நடிகை வித்யா பிரதீப்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *